ADDED : மே 22, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:: ஈரோடு கருங்கல்பாளையம் ஓம்காளியம்மன் கோவில் வீதி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 17; பெற்றோர் இல்லாத நிலையில், பெரியப்பா சேகர் வீட்டில் வசித்தார். கடந்த, 20ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. சேகர் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் இரணியன் வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகள் திவ்யதர்ஷினி, 20; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 20ம் தேதி மாயமானவர், மொபைல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தாய் பர்வதம் புகாரின்படி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.





