ADDED : ஜூன் 24, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே பல்லத்துார், நமச்சில்மேடு பகுதியில் வசிப்பவர் வசந்தி, 45; இவரின் மகள் ஆனந்தி, 22; தர்மபுரியை சேர்ந்த சுதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். சுதன் ஆந்திராவில் வேலை செய்கிறார்.
மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் தாய் வீட்டில் மகளுடன் ஆனந்தி இருந்தார். நேற்று முன்தினம் சுதன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி, மகளை கேட்டபோது, மாமியார் வசந்தி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.


