ADDED : மார் 26, 2025 01:45 AM
நுகர்வோர் அமைப்பு கூட்டம்
ஈரோடு:ஈரோட்டில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் அமைப்புகளுடனான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாவட்டத்தில் பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், நுகர்வோர் நலன் சார்ந்த பிரச்னைகள், கருத்து, கோரிக்கைகளை தெரிவித்து, 15க்கும் மேற்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள், 64 மனு வழங்கினர். மனுக்கள் மீது விரைவான தீர்வு காண கலெக்டர் யோசனை தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.