Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ADDED : ஜூலை 02, 2024 07:25 AM


Google News
ஈரோடு: சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ரயில்களில் கடந்த மாதம், 13ம் தேதி- நள்ளிரவில், மூன்று பெண்களிடம் மர்ம ஆசா-மிகள் நகை பறித்து தப்பினர். ஆசாமிகளை பிடிக்க ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மொபைல்போன் சிக்னல், கண்-காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்-தப்பட்டது.

இதன் அடிப்படையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுராய், 32, தீப்ஜோதி, 28, என இருவரை, சென்னை மற்றும் ஆந்திராவில், போலீசார் நேற்று கைது செய்தனர். ரயிலில் பயணித்து, பய-ணிகள் அசந்து துாங்கும் வேளையில் நகை பறித்து, ரயில் மெது-வாக செல்லும் போது குதித்து தப்பியது தெரிய வந்தது.

இருவரிடமும் இருந்து இரண்டரை பவுன் நகை மீட்கப்பட்டது. இருவர் மீதும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us