Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மத்திய பஸ் ஸ்டாண்டில்19 கடைகள் ஏலம்

மத்திய பஸ் ஸ்டாண்டில்19 கடைகள் ஏலம்

மத்திய பஸ் ஸ்டாண்டில்19 கடைகள் ஏலம்

மத்திய பஸ் ஸ்டாண்டில்19 கடைகள் ஏலம்

ADDED : மார் 13, 2025 02:01 AM


Google News
மத்திய பஸ் ஸ்டாண்டில்19 கடைகள் ஏலம்

ஈரோடு:ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், 19 கடைகள் ஏலம் எடுக்கப்பட்டது.

ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், 45.33 கோடி ரூபாய் மதிப்பில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தை கடந்த டிச., 20ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வளாகத்தின் தரைத்தளத்தில், 32 கடைகள், ஒரு உணவகம், முதல் தளத்தில், 22 கடைகள், சூப்பர் மார்க்கெட், ேஷாரூம் அமைத்துள்ளனர். இக்கடைகளுக்கான ஏலம் நேற்று, மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி ஆணையர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. முன்பணம் செலுத்தியவர்கள் பங்கேற்றனர். தரைத்தளத்தில், 19 கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதமுள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட், ேஷாரூம் போன்றவை ஏலம் போகவில்லை. ஏலம் போன கடைகளுக்கு, பணம் வசூலிக்கப்படவில்லை. ஏலம் போகாத கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us