ADDED : செப் 04, 2025 02:12 AM
-----கோபி, கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் மாரப்பன், 61, கூலித்தொழிலாளி; இவர் கவுந்தப்பாடி-ஈரோடு சாலையில் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாருதி ஆல்டோ கார் மோதிய விபத்தில், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாரப்பன் பலியானார்.
இதையடுத்து அவரது உடல், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மாரப்பன் மகன் ராமச்சந்திரன், 44, அளித்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.