ADDED : ஆக 05, 2024 01:58 AM
ஈரோடு, தமிழ்நாடு காவிரி ஆரத்தி குழு சார்பில், அமாவாசை தினத்தில் காவிரி நதிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி சோலாரை அடுத்த சாத்தம்பூர் வல்லாள ஈஸ்வரர் கோவிலில், ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் துாவியும், அகல் விளக்குகளை ஏற்றியும் மிதக்க விட்டு வழிபட்டனர். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, திருப்பூர் மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.