Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

ADDED : ஜூலை 31, 2024 07:21 AM


Google News
ஈரோடு: பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருட்-களை ஏற்றுவதை தடுத்து நிறுத்த, உரிய நடவ-டிக்கை எடுக்க, டிரைவர்கள் சார்பில், ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு தரப்பட்டது.ஈரோடு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் குழந்தைசாமி தலைமையி-லான டிரைவர்கள், ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்ப-தாவது:

ஈரோடு-சத்தி ரோடு பகுதிகளில் உள்ள கட்டு-மான நிறுவனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல, அப்பகுதியில் உள்ள மினி ஆட்டோ, டாடா ஏஸ் வாகனங்களை, வாட-கைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். கடந்த, 20 ஆண்டுகளாக, 27க்கும் மேற்பட்ட மினி வேன், டாடா ஏஸ் வாகனங்கள் மூலம் வாடகைக்கு எடுத்து வருமானம் ஈட்டி குடும்பத்தை பராம-ரித்து வந்தனர். தற்போது சத்தி ரோடு பகுதியில் எஸ்.டி.டி.யு., ஆட்டோ சங்கம் எல்லை மாரி-யம்மன் கோவில் அருகே ஆட்டோவை நிறுத்தி-யுள்ளனர். நேரு வீதியில் மகாத்மா காந்தி ஆட்டோ சங்கம் என்ற பெயரிலும் ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். இவர்கள் தங்கள் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதற்கு பதிலாக கட்டுமான பொருட்களை ஏற்றி செல்கின்றனர். சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் என வெளி மாவட்டங்-களுக்கும் சரக்குகளை ஏற்றி செல்கின்றனர்.இதனால் சரக்கு மட்டுமே ஏற்றி செல்ல உரிமம் பெற்ற வாகனங்களுக்கு வாடகை கிடைக்காமல், சரக்கு வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதித்-துள்ளனர். எனவே பயணிகள் ஆட்டோவில் கட்-டுமான பொருட்கள் போன்ற சுமைகளை ஏற்று-வதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us