ADDED : மார் 14, 2025 01:38 AM
மா.கம்யூ., சார்பில் கருத்தரங்கு
சத்தியமங்கலம்:மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய, 24வது மாநாடு மதுரையில் அடுத்த மாதம் நடக்கிறது. இதுகுறித்து ஆலோசிக்க சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் திறந்தவெளி கருத்தரங்கு நடந்தது.
ஈரோடு மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். இதில் த.மு.எ.க.ச., மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.