ADDED : பிப் 12, 2025 01:10 AM
அ நிறம் | அளவு
இடைத்தேர்தல் நிறைவுபோலீஸ் பிரிவு கலைப்பு
ஈரோடு:ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி எஸ்.பி., அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் ஒரு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ..க்கள், போலீசார் நியமிக்கப்பட்டனர். பதற்ற ஓட்டுசாவடி, வேட்பாளர்கள் பிரசார நிலவரம், தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்ததால், மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவு அலுவலகம் கலைக்கப்பட்டு, அங்கு பணியாற்றிய அனைவரும் அவர்களது வழக்கமான பணிக்கு திரும்பினர்.
