/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வுமஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வு
மஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வு
மஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வு
மஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வு
ADDED : மார் 23, 2025 01:12 AM
மஞ்சள் விலை இரண்டு வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,150 உயர்வு
ஈரோடு:ஈரோடு பகுதியில் நான்கு இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. தற்போது புதிய மஞ்சள் வரத்தாகிறது. கடந்த பிப்.,19 ல் ஒரு குவிண்டால் மஞ்சள், 15,199 ரூபாய்க்கு அதிகபட்சமாக விற்பனையானது. பின் குறைந்து கடந்த, 4ல் ஒரு குவிண்டால், 13,799 ரூபாய்க்கு விற்ற நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், 7,000 மதல், 14,939 ரூபாய், கிழங்கு மஞ்சள், 6,089 முதல், 13,309 ரூபாய் வரை விற்பனையானது. இதன்படி கடந்த இரு வாரத்தில் குவிண்டாலுக்கு, 1,150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நான்கு மார்க்கெட்டிலும் நேற்று முன்தினம், 8,029 மூட்டை மஞ்சள் வரத்தாகி, 5,897 மூட்டை விற்றது.