ஈரோடு பெரிய மாரியம்மன்கோவில் கடைகள் ஏலம்
ஈரோடு பெரிய மாரியம்மன்கோவில் கடைகள் ஏலம்
ஈரோடு பெரிய மாரியம்மன்கோவில் கடைகள் ஏலம்
ஈரோடு பெரிய மாரியம்மன்கோவில் கடைகள் ஏலம்
ADDED : மார் 15, 2025 02:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு பெரிய மாரியம்மன்கோவில் கடைகள் ஏலம்
ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் குண்டம், தேர்த்திருவிழா வரும், 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இதையொட்டி கோவில் வளாகம், சுற்றுப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க, பொது ஏலம் நேற்று மாலை நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.
எட்டு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்திய, 11 பேர் பங்கேற்றனர். இதில் தற்காலிக கடைகள், 28.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் அஞ்சுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


