நத்தம்: -நத்தம் வேலம்பட்டி கந்தசாமி நகரை சேர்ந்தவர் ஆதப்பன் 27.
இவரது மனைவி சக்தி காளீஸ்வரி 19. இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் பிப்.8ல் மதுரை- ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெண்ணின் கணவர் நத்தம் போலீசில் புகாரளித்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.