Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

ADDED : ஜூன் 10, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

நகரின் மையத்தில் உள்ளது பிரையன்ட் பூங்கா. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். சமீபத்தில் 62 வது மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் பூங்கா மேற்குபகுதி வளாக சுவர் சேதமடைந்த நிலையில் அவ்வப்போது காட்டுமாடுகள் பூங்காவிற்குள் புகுந்து பூச்செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று காலை பூங்காவிற்குள் பயணிகள் இருக்கும் போது காட்டுமாடு ஒன்று நடமாடியது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். பின் வனத்துறையினர் காட்டுமாடை வனத்திற்குள் விரட்டினர். நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பூங்காவில் சேதமடைந்த வளாக சுவரை விரைந்து கட்ட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us