Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு

ADDED : செப் 29, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.

அபிராமி அம்மன் கோயிலிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் கோயிலிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட கோயில்களில், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகம், உற்ஸவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனுக்கு பால்,பழம்,பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகன் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us