/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்
ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்
ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்
ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்

மதகுகள் அமையுங்க
அருளப்பன், விவசாயி : குளத்திற்கு முக்கியமனது மதகுகள் தான். மதகு இல்லாததால் பயிரிட்ட நிலத்திற்குள் தண்ணீர் புகுந்து அனைத்தும் வீணாகிறது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பிரச்னை நடக்கிறது. மதகு அமைத்து தேவைப்படும்போது நீரை திறந்து விட்டாலே போதும் விவசாயம் செழிக்கும். நெல் விளைந்த பூமி தற்போது புதர் மண்டி கிடக்கிறது. எவ்வளவோ முறையிட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. நாங்களும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம். அரசின் ஒத்துழைப்போடு பணிகள் நடந்தால் நாங்கள் மீண்டும் விவசாயம் செய்வோம்.
தேவை நிரந்தர கால்வாய்
- மணி, விவசாயி, அணைப்பட்டி: குளம் நிரம்பி மறுகால் பாய்வது வழக்கம் தான். ஆனால் கால்வாய்கள் முறையாக இருந்தால் அதனை சரிசெய்ய முடியும். அனைத்து நிலத்திற்கும் செல்லும்படி சிமென்டில் கால்வாய் அமைத்தால் அனைவருக்குமே பயன்படும். தண்ணீர் இல்லாத நேரங்களிலும் மாற்று வழி மூலமாகவும் வயலுக்கு நீர் பாய்ச்சலாம். நாங்களும் சரியாக பராமரித்துக் கொள்வோம்.
கரை களை பலப் படுத்துங்க
ராஜா, விவசாயி, காமாட்சிபுரம் : கரைகளை பலப்படுத்த வேண்டும். நகர் பகுதிகளில் வாக்கிங் போவதற்காகவே சில குளங்களை சுற்றி வேலிகள் அமைந்து பேவர் பளாக் கற்களால் அலங்கரிக்கின்றனர். இயற்கை சூழ்ந்த பகுதிகளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளலாம். குளத்தை துார்வாரி நடைபாதைகள் அமைத்தால் வயல்வெளிக்கு மத்தியில் ஒரு அழகிய சுற்றுலாத்தளம் போல காட்சியளிக்கும். விவசாய மக்கள் ஒத்துழைப்பு தருகிறோம். குளத்தை சீரமைத்தால் போதும்.


