ADDED : மே 16, 2025 03:34 AM
பழநி: பெரியம்மாபட்டி, ஆண்டிபட்டி, இரவிமங்கலம் கிராமங்களில் அரசு உபரி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ,விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமை வகித்தார்.