Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ADDED : பிப் 11, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.

தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தரைப்பகுதிக்கு ஈடு கொடுக்கும் விதமாக மலைப்பகுதியிலும் வெயிலின் தாக்கம் உள்ளது. எனினும் மதியம் 3:00 மணிக்கு பின் காற்றில் ஈரப்பதம், பனியின் தாக்கம் என குளிர் வாட்டி வதைக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us