ADDED : ஜன 11, 2024 04:51 AM
வேடசந்துார், : குட்டம் ஊராட்சி கோட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 127 மாணவர்கள் படிக்கின்றனர். கம்ப்யூட்டர் வகுப்பில் பாடம் கற்றுக்கொள்ளும் வகையில் 8 கம்ப்யூட்டர்கள் உள்ளன.
இங்கு இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 8 பேட்டரிகளை திருடினர். பெல்லையும் கழட்டி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.