/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை' யில் பூத்துக் குலுங்கும் கரு ஊமத்தான் பூ ' கொடை' யில் பூத்துக் குலுங்கும் கரு ஊமத்தான் பூ
' கொடை' யில் பூத்துக் குலுங்கும் கரு ஊமத்தான் பூ
' கொடை' யில் பூத்துக் குலுங்கும் கரு ஊமத்தான் பூ
' கொடை' யில் பூத்துக் குலுங்கும் கரு ஊமத்தான் பூ
ADDED : செப் 14, 2025 03:46 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் ஏரிச்சாலையில் பூத்து குலுங்கும் கருஊமத்தான் பூக்களை பயணிகள் ரசித்தனர்.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலை, மலைமுகடுகள் அருவி ,இயற்கை சூழலை பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் ஏரிச்சாலை ஓரத்தில் உள்ள காலியிடங்களில் நகராட்சி வேலி அமைத்து அதில் பூச்செடிகளை நடவு செய்து பராமரிக்கின்றனர்.
இதில் கரு ஊமத்தான் செடிகளில் மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்து குலுங்குகிறது. ஏரியின் அழகை ரசிக்கும் பயணிகள் இப்பூக்களை பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.