/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு
மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு
மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு
மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு

மரம் வளர்ப்பு ஊக்குவிக்கிறோம்
குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு: மரக்கன்றுகள் நடவு செய்ய இயலாத பகுதிகளில் விதைப்பந்துகளை தூவினால் மழைக் காலங்களில் முளைத்து வளரும் தன்மை கொண்டது. மண், இயற்கை உரம் மற்றும் விதைகள் கலந்த உருண்டையாக தயார் செய்கிறோம். இவ்வாறு தயாரிக்கப்படும் விதைப்பந்துகள் ஓராண்டு காலத்திற்கு கெடாமல் இருக்கும். மலை, ரோட்டோரங்கள், குளக்கரை கோவில் வளாகம், வனப்பகுதி போன்ற இடங்களில் விதைப்பந்துகளை நாங்கள் தூவி வருகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் மரக்கன்று, விதை பந்துகள் வழங்கல் போன்ற சமூக நலன் சார்ந்த பரிசுகளை வழங்கி இயற்கையான சூழல், மரம் வளர்ப்பை மேம்படுத்தி அனைவரும் பங்காற்ற வேண்டும். தேவையான ஆலோசனை மற்றும் விதைப்பந்துகளை வழங்க தயாராக உள்ளோம்.
இல்ல விழாக்களில் விதை பந்துகள்
குழந்தைவேல், பொருளாளர், விழுதுகள் அமைப்பு : சமீபத்தில் நடந்த எங்களது இல்ல திருமண விழாவில் பங்கேற்பவர்கள் சிரமம் இன்றி மரக்கன்றுகளை நடுவதற்கு என்ன செய்யலாம் என குடும்பத்தினர், நிர்வாகிகளுடன் யோசித்தோம். இதன் பயனாக விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு விதை பந்துகள் அடங்கிய பெட்டகத்தை கொடுத்து போகும் வழியில் தூவச் செய்தால் மழை பெய்யும் போது அவை முளைத்து மரங்களாக வளர ஏதுவாக இருக்கும் என முடிவு செய்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப் பந்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினோம். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, வருவாய் துறை மற்றும் போலீசாருடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம்.