ADDED : ஜூன் 22, 2025 09:24 PM

பழநி:பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது.
வெளிப்பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இங்கு பஸ் ஸ்டாண்டில் மாலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சிரமப்பட்டனர்.