ADDED : செப் 18, 2025 05:19 AM

பழநி : பழநி முருகன் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை, ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம், யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் அபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.