Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்

கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்

கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்

கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்

ADDED : ஜூன் 16, 2025 02:04 AM


Google News
திண்டுக்கல்: தென் மாவட்டத்திற்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 4.3 கிலோ கஞ்சா, 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

புருலிய- - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் கடத்திவருவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்த ரயிலில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் 4 கிலோ 300 கிராம் கஞ்சா, 10 கிலோ குட்கா பதுக்கி வைத்து கடத்திவந்தது தெரிந்தது. விசாரணையில், அந்த பைகள் யாருடையது என தெரியவில்லை. ரயில்வே போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவிலும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். 2 மாதங்களில் ரயில் மூலமாக 100 கிலோவுக்கு மேல் கஞ்சா, குட்கா பொருட்கள் பிடிபட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலமாக போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவதை தடுக்க ரயில்வேயில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us