ADDED : அக் 04, 2025 04:11 AM

தாண்டிக்குடி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆத்துார் ஆர்.சி.பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மனோகரன் இலவச கல்வி அறக்கட்டளை சார்பாக சிலம்ப விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிலம்ப ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
அறக்கட்டளை நிர்வாகி கண்ணன். பசுமை வாசல் நிபுணர் கோகுல் பரிசு வழங்கினார்.
ஆசிரியர் விஜய பாஸ்கர் போட்டியை நடத்தினார்.
தாண்டிக்குடி பட்லங்காடு அசேபா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
ஏற்பாடுகளை நிர்வாகி லெனின் செய்திருந்தார்.


