Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

ADDED : மே 19, 2025 04:41 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.

அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிக்குக் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.

தீபாராதணை நடைபெற்றது. முன்னதாக பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதேபோல், கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது. மாலை அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

கன்னிவாடி : தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகம், உற்சவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், தேய்பிறை சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us