Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சஷ்டி;--- கோயில்களில் வழிபாடு

சஷ்டி;--- கோயில்களில் வழிபாடு

சஷ்டி;--- கோயில்களில் வழிபாடு

சஷ்டி;--- கோயில்களில் வழிபாடு

ADDED : ஜூலை 02, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.

அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.

ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின், தீபாராதணை நடைபெற்றது.

முன்னதாக பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதேபோல், கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, அசோக் நகர் பாலமுருகன், குள்ளனம்பட்டி சுப்பிர மணியசாமி கோயில் களில் உள்ளிட்ட முருகன் கோயில்களில், சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும், வேம்பார் பட்டி பாலமுருகன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us