/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சிசுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி
சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி
சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி
சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி

சுகாதாரக்கேடாக உள்ளது
இரா.பிரபாகரன்,கிழக்கு மாவட்ட செயலாளர்,நாம் தமிழர் கட்சி,வீரசின்னம்பட்டி: வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் குப்பை ,கோழி கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது. ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கவும், மக்கும்,மக்காத குப்பை பிரித்து குப்பை மேலாண்மை செய்யவும் பணியாளர்கள் உள்ளனர்.
நடவடிக்கை எடுங்க
என்.தனபால்,பா.ஜ., பிரமுகர், வீரசின்னம்பட்டி: அனைத்து இடங்களிலும் குப்பை கொட்டப்பட்டு கடுமையான சுகாதார பிரச்னை ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பை என அனைத்தையும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் தீட்டு கொளுத்துகின்றனர். இதன் நச்சு புகையால் யெதாற்று நோய் அபாயம் உள்ளது. அரசு பணியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கொடுத்த பணிகளை செய்வதை விட்டு , அரசு கான்ட்ராக்ட் வேலைகளை செய்கின்னர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு உற்பத்தியாகிறது
ராஜா,டிரைவர்,சாணார்பட்டி: ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை என சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. துாய்மைபணிகளை செய்யும் ஊராட்சி அலுவலகத்தின் எதிரிலே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் அளவிற்கு மோசமானநிலை உள்ளது. சுகாதாரப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியும், துாய்மை பணிகளை மேற்கொள்ள பணியாளர்களிலிருந்தும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பதால் ஊராட்சி குப்பை மேடாக உள்ளது.