Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்

ADDED : செப் 08, 2025 03:20 AM


Google News
நிலக்கோட்டை: -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டையில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ், ஊராட்சிச் செயலாளர்கள் சங்க மாநில இணைச்செயலாளர் விஜயகர்ண பாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டியராஜன் கூட்டாக தெரிவித்ததாவது:

தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்து பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி ஊராட்சிகள் மூலம் வழங்கிட வேண்டும்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு கோர்ட் உத்தரவின்படி சலுகைகள் வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் திருச்சியில் மாநில அளவிலான மாநாடு நடந்தது.

அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செப்., 24ல் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், நவ., 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடக்கவுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பு பணி நடைபெற்று வருகிறது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us