ADDED : செப் 11, 2025 06:49 AM
வடமதுரை : பெரியகோட்டை பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜீவானந்தம் 21. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வேலை பார்க்கிறார். புகையிலை ப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவி அருள்விஜிலட்பிரபா 20. இருவரும் பஸ்சில் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறினர்.
பெற்றோர் சம்மதம் கிடைக்காது என முடிவு செய்த இருவரும் வீட்டினருக்கு தெரியாமல் கோயில் ஒன்றில் திருமணம் செய்தனர். பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.