ADDED : செப் 13, 2025 04:11 AM
பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மேம்பாட்டுக்காக ஓய்வு பெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலர்கள் ரூ.ஒரு லட்சம் மதிப்புடைய காசோலையை வழங்கினர்.
இதை ஓய்வு பள்ளி கல்வி இயக்குனர் பழனிவேலு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பெற்றுக்கொண்டார். கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், , மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா கலந்து கொண்டனர்.