Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஜாமின்கோரி அங்கித்திவாரி மீண்டும் மனு தாக்கல்

ஜாமின்கோரி அங்கித்திவாரி மீண்டும் மனு தாக்கல்

ஜாமின்கோரி அங்கித்திவாரி மீண்டும் மனு தாக்கல்

ஜாமின்கோரி அங்கித்திவாரி மீண்டும் மனு தாக்கல்

ADDED : ஜன 31, 2024 02:08 AM


Google News
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி தரப்பில் ஜாமின் கோரி 2வது முறையாக நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நாளை (பிப்.1) விசாரணைக்கு வருகிறது.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டிச.1ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு 4வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் ஜாமின்மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் அங்கித்திவாரிக்கு ஜாமின் வழங்க கோரி 2வது முறையாக இதே நீதிமன்றத்தில் அவரது தரப்பில் வழக்கறிஞர் செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். நாளை விசாரணைக்கு வருகிறது.

வழக்கறிஞர் செல்வம் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us