Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

அய்யலுார் கோயிலில் பூஜாரி தர்ணா

ADDED : செப் 06, 2025 04:01 AM


Google News
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டி கருப்பணசுவாமி கோயிலில் சில தலைமுறைக்கு முன் முதன்முறையாக பூஜாரியாக இருந்தவர்களில் வாரிசுகளே வழித்தோன்றலாக அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடையில் தர்மகர்த்தா பூஜாரி தரப்பு இடையே ஏற்பட்ட பிரச்னை ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் வழக்காக மாறியது. இதில் வழக்கு நடத்திய 6 பேர் குடும்பத்தினர் நீதிமன்ற உத்தரவு பெற்று பூஜாரி பணியை செய்கின்றனர். இந்நிலையில் தற்போது வழக்கு நடத்தி உத்தரவு ஏதும் பெறாத பூஜாரி அய்யன் 34 ,பூஜாரி பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us