ADDED : அக் 16, 2025 05:13 AM
வடமதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், துணைச்செயலாளர் நந்தக்குமார் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, கணேஷ்வதி பங்கேற்றனர்.


