Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : ஜூன் 23, 2025 04:38 AM


Google News
பெண் கைது

ரெட்டியார்சத்திரம் : முத்தனம்பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி பாண்டியம்மாள் 52. இவர் கருப்பணசாமி கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். வித்தியாசத்திரம் எஸ்.ஐ., கணேசன் தலைமையில் சென்ற போலீசார் இவரை கைது செய்தனர். 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி பறிமுதல்

கன்னிவாடி : எஸ்.ஐ., சிராஜுதீன் தலைமையிலான போலீசார், தர்மத்துப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாப் அருகே தெத்துப்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 42, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் பெண் பலி

எரியோடு : புதுரோட்டை சேர்ந்த நாகசுந்தரம் மனைவி அமுதா 60. நேற்று முன்தினம் இரவு ரோட்டில் நடந்து சென்ற போது அவ்வழியே வந்த டூவீலர் மோதி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us