ADDED : ஜன 15, 2024 04:23 AM
வேடசந்துார் : கொங்கு நகரை சேர்ந்தவர் நாராயணன் 40.
வ.உ.சி., நகரில் டூவீலரில் அமர்ந்தவாறு வண்டியை நிறுத்தி இருந்தார். அந்த வழியாக வந்த இளைஞர் நாராயணன் சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் வேடசந்துாரை சேர்ந்த பிரபு 21, என்பது தெரிய அவரை எஸ்.ஐ., பாண்டியன் கைது செய்தார்.


