Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தொற்று பரப்பும் கழிவுநீரால் மக்கள் அவதி...

தொற்று பரப்பும் கழிவுநீரால் மக்கள் அவதி...

தொற்று பரப்பும் கழிவுநீரால் மக்கள் அவதி...

தொற்று பரப்பும் கழிவுநீரால் மக்கள் அவதி...

ADDED : ஜன 29, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
செடிகளால் ஏற்படும் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் நகராட்சி கைராசி நகர் வழியாக செல்லும் ஓடையில் செடிகள் முளைத்துள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் செல்லாமல் நிறைந்து வெளியேறுகிறது. புதர் மண்டியுள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்தையன்,ஒட்டன்சத்திரம்.---------

டூவீலர்களால் அவதிப்படும் மக்கள்

தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டி பஸ் ஸ்டாண்டில் சிலர் டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால் பயணிகள் வெயில், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். டூவீலர்கள் நிறுத்தாமல் தடுக்க வேண்டும். டி.பாலன்,குப்பம்மாள்பட்டி---------

பள்ளத்தால் ஏற்படும் விபத்துக்கள்

திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம் உள்ளது. இரவில் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் நடக்கின்றன. பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சித்குமார், திண்டுக்கல்.----------

சேதமான மின்கம்பத்தால் அச்சம்

மோர்பட்டி பெருமாள்கோவில்பட்டியில் கோயில்களுக்கு செல்லும் வழியில் இருக்கும் மின்கம்பம் சேதமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் எந்நேரமும் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கணன், அய்யலுார்.-----------

சேதமான ரோடால் அவதி

சாணார்பட்டியிலிருந்து கோணப்பட்டி வழியாக செல்லும் ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தினமும் இவ்வழியில் செல்லும் பள்ளி மாணவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். ரோடை புதுப்பிக்க வேண்டும். கருப்பன், சாணார்பட்டி.------------

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளளது. இதனால் அங்கும் இங்குமாய் ரோடுகளில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. முறையாக இங்கு குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் குப்பையை அகற்ற வேண்டும். சக்திவேல், திண்டுக்கல்.------------

தொற்று பரப்பும் கழிவுநீர்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடாக உள்ளது. கொசு உற்பத்திக்கும் துணை போகிறது. துார்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபு, திண்டுக்கல்.------------

...................................................................





      Our Apps Available On




      Dinamalar

      Follow us