/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள் அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்
அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்
அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்
அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்

வசதிகளே இல்லை
ஆரோக்கிய மேரி, எனாமல் பேக்டரி ரோடு : குடியிருப்புகள் பள்ளத்தில் உள்ளதால் சிறிய மழை பெய்தாலே மழை நீருடன் சாக்கடை நீரும் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. முதியவர்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள அனைவரும் நோய் தொற்றினால் பாதிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
நடவடிக்கை இல்லை
இந்திராணி, வேம்பன் காலனி : குடிநீர் வசதி இல்லை. கழிவுநீரால் துார்நாற்றம், நோய்தொற்று அபாயம் உள்ளது. எத்தனை முறை மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை. சுகாதாரக்கேடு, நாய்கள் தொல்லை, கொசுக்கடி என இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் வாழகின்றனர். எந்தவித வசதிகளும் செய்து தரவில்லை என்பதால் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். ஓட்டு கேட்டு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க மாட்டோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதியில்லை என்கின்றனர்
அமலோற்பவமேரி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டு பிரச்னைகள் கவனத்திற்கு வந்துள்ளது. மாநகராட்சியிடம் கவுன்சிலர் என்ற முறையில் பலமுறை கூறிவிட்டேன். நிதியில்லை என்ற பதிலை மட்டும் கூறுகின்றனர். சில நேரங்களில் சொந்த செலவில் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி செய்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மக்களிடம் அதிருப்தியை நாங்கள் பெற வேண்டியிருக்கிறது. குடிநீர் கூட வருவதில்லை. அதிகாரிகள் வரிவசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை,என்றார்.