/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு
அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு
அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு
அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு

அதிகாரிகள் அலட்சியம்
விஜயசாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பட்டத்துநாயக்கன்பட்டி: மேலாண்மை குழு பொறுப்பேற்று 2 ஆண்டுகளாக, கட்டட சீரமைப்பை வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இப்பள்ளியின் அருகே உள்ள அங்கன்வாடி, கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அடுத்த சில வாரங்களில் சேதமடைந்ததால், தற்போது குழந்தைகள் மற்றொரு அரசு கட்டடடத்தில் வைத்து பராமரிக்கும் நிலை உருவானது. பல மாதங்களாகியும் இதனை சீரமைக்கவோ, அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் முகாமிட்டுள்ளன.
தரம் உயர்த்தணும்
முத்துலட்சுமி,குடும்ப தலைவி, பட்டத்துநாயக்கன்பட்டி: பள்ளி அருகே உள்ள பயன்பாடற்ற கட்டடத்தில் இருந்து விஷப் பூச்சி நடமாட்டம் காரணமாக, மாணவர்கள் உயிர் பயத்துடன் கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமைச்சரின் சொந்த தொகுதியாக இருந்த போதும், அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அலட்சியம் நீடிக்கிறது. அச்சம் கொண்ட மனநிலையுடன், மாணவர்களை பள்ளிக்கு பெற்றோர் அனுப்ப வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தொடர்கல்விக்கு ஏதுவாக, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றார்.ரெட்டியார்சத்திரம் பி.டி.ஓ., மாரியப்பன், பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், கலைந்தனர்.