ADDED : செப் 21, 2025 04:35 AM
குஜிலியம்பாறை:விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி சாரண சாரணியர் இயக்கம் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, ராசாக்கவுண்டனுார் குளத்து கரையில் 300 பனை விதை நடும் விழா நடந்தது.
சாரண சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சடையாண்டி, உடற்கல்வி ஆசிரியர் டைட்டஸ்எழிலன் பங்கேற்றனர்.