Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் நுாலகம் திறப்பு

ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் நுாலகம் திறப்பு

ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் நுாலகம் திறப்பு

ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் நுாலகம் திறப்பு

ADDED : ஜூன் 18, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஏ.சி., வசதியுடன் அரசு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கான புத்தகங்கள், தி.மு.க., தலைவர்கள் எழுதிய நுால்கள் என 3000 க்கு மேற்பட்ட புத்தகங்களுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

மாவட்ட அவைத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், சுப்பிரமணி, பாலு, பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த் குமார், தலைமை நிலைய செய்தி தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அழகிரி சதாசிவம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர்கள் ஆனந்தராஜ், பாண்டியராஜன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: ஜூன் 20 முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும். முதல்வர் பொறுப்பேற்ற 49 மாத ஆட்சி காலத்தில் செய்த அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us