Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மூதாட்டி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்

மூதாட்டி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்

மூதாட்டி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்

மூதாட்டி கொலை: தொழிலாளிக்கு ஆயுள்

ADDED : ஜன 06, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த பாக்கியலட்சுமியை 60, கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த வடமதுரை கோவிந்தநாயக்கர் நகரை சேர்ந்த பெரியசாமிக்கு 40, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வேடசந்துாரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி60. இவரது மகன்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் பாக்கியலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

2012ல் வடமதுரை கோவிந்தநாயக்கர் நகரை சேர்ந்த பெரியசாமி40,பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்தார். பெரியசாமி அடிக்கடி பாக்கியலட்சுமியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதை விரும்பாத பாக்கியலட்சுமி வேலைக்கு வேண்டாம் எனக்கூறி உள்ளார்.

ஆத்திரமடைந்த பெரியசாமி,பிளேடால் பாக்கியலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றார் . இதன் வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி பெரியசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us