ADDED : ஜூன் 11, 2025 01:01 AM
ஆத்துார்,: காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.
டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சத்திரப்பிரியா, சித்தா பிரிவு மருத்துவர் சர்மிளாதேவி , அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.ஏற்பாடுகளை மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் செய்திருந்தார்.