/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்
வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்
வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்
வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்

ஆக்கிரமிப்புகளால் நெரிசல்
ஏ.குருசாமி ,முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: கனரக, இருசக்கர, சரக்கு வாகனங்கள் என எந்த நேரமும் கணிசமான அளவில் இத்தடத்தில் போக்குவரத்து இருக்கும். தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ரோடு விரிவாக்கத்தை காரணம் கூறி குடிநீர் வினியோக குழாய்கள் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மெயின் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி இல்லை. பூஞ்சோலை துவங்கி பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் கபளீகரம் செய்துள்ளன. மாற்று ஏற்பாடு இல்லாத நிலையில் ரோட்டின் அகலத்தை குறைத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. சிறு, குறு தொழில் நடத்தும் வணிகர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
திறந்த வெளியில் பயணிகள்
நாகஜோதி,குடும்பத் தலைவி, சின்னாளபட்டி : தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிட பகுதியை முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை. காத்திருக்கும் பயணிகளுக்கான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளும் இல்லை. நிழற்குடை வசதி இல்லாத சூழலில் திறந்த வெளியில் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பெண்களுக்கான பாலுாட்டும் அறை இல்லாததால் கைக்குழந்தையுடன் வரும் பயணிகள் பாதிக்கின்றனர். பணி துவங்கி பல மாதங்களாகியும் ஆமை வேகத்தில் நடக்கிறது.
-வீணாகும் அரசு பணம்
திருநாவுக்கரசு ,நெசவு தொழிலாளி, சின்னாளபட்டி: புதுப்பிப்பு பணிகளுக்காக சின்னாளபட்டி கோட்டைமந்தை பகுதிக்கு தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு உள்ளது. விரிவாக்க பணிக்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த 8 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கழிப்பறை திறக்காமலே இடித்து அகற்றி விட்டனர். அரசு பணத்தை வீணாக்குவதை அலட்சியமாக செயல்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வரும் மகளிர் மட்டும் இன்றி குழந்தைகள்,முதியோர் உள்ளிட்ட பயணிகள் சுற்றுச்சூழலையும், மறைவையும் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர் .