/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நத்தம்-சென்னை அரசு பஸ் நிறுத்தத்தால் பொதுமக்கள் தவிப்புநத்தம்-சென்னை அரசு பஸ் நிறுத்தத்தால் பொதுமக்கள் தவிப்பு
நத்தம்-சென்னை அரசு பஸ் நிறுத்தத்தால் பொதுமக்கள் தவிப்பு
நத்தம்-சென்னை அரசு பஸ் நிறுத்தத்தால் பொதுமக்கள் தவிப்பு
நத்தம்-சென்னை அரசு பஸ் நிறுத்தத்தால் பொதுமக்கள் தவிப்பு

தேவையற்ற அலைச்சல்
ஆர்.கே.கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., கிளைச் செயலாளர் , கே.அய்யாபட்டி: 10 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் சென்னை அரசு பஸ் சேவை இருந்தது. இதனை வர்த்தகர்கள்,பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினர்.
மக்களை ஏமாற்றுகின்றனர்
ஏ.ரமேஷ், அ.தி.மு.க., வார்டு உறுப்பினர், பாப்போம்பட்டி: தனியார் பஸ்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் அரசு பஸ்சை விட இரண்டு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
பயணிக்க தயங்குகின்றனர்
எஸ்.மணிவண்ணன், ம.தி.மு.க.,மாவட்ட மாணவரணி செயலாளர், கோபால்பட்டி: தொடர் விடுமுறை தினங்கள், சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் அரசு போக்குவரத்து சேவை உள்ளது. எல்லா நாட்களில் செயல்படும் என்ற நிரந்தரம் இல்லாத நிலையில் உள்ளதால் பயணிகள் இதை நம்பி பயணிக்க தயங்குகின்றனர். தற்போது நத்தம் தொழில் வளர்ச்சி மிக்க நகரமாக வளர்ந்து வருவதால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து தினசரி போக்குவரத்து சேவையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


