Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆத்துார் தொகுதியில் 2 ஆயிரம் கனவு இல்ல வீடுகள் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஆத்துார் தொகுதியில் 2 ஆயிரம் கனவு இல்ல வீடுகள் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஆத்துார் தொகுதியில் 2 ஆயிரம் கனவு இல்ல வீடுகள் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஆத்துார் தொகுதியில் 2 ஆயிரம் கனவு இல்ல வீடுகள் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ADDED : செப் 14, 2025 03:49 AM


Google News
கன்னிவாடி:''நடப்பாண்டில் ஆத்துார் தொகுதியில் மட்டும் அரசின் 2 ஆயிரம் கனவு இல்லம் திட்ட வீடுகள் வழங்கப்பட உள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமையில் நடந்தது. மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், 2024--25ம் நிதி ஆண்டிற்கான அரசின் கனவு இல்ல வீடுகள் திட்டத்தில் தற்போது 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டு பணிகள் முடிந்து பயனாளிகள் குடியேறிவிட்டனர். நடப்பாண்டில் ஆத்துார் தொகுதியில் மட்டும் 2 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் ஏழை முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை அ.தி.மு.க., அரசு நிறுத்தியது. தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தாசில்தார் ஜெயபிரகாஷ் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் மலரவன், கண்ணன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us