/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாரியம்மன் கோயிலில் மாசி விழா முகூர்த்தக்கால்மாரியம்மன் கோயிலில் மாசி விழா முகூர்த்தக்கால்
மாரியம்மன் கோயிலில் மாசி விழா முகூர்த்தக்கால்
மாரியம்மன் கோயிலில் மாசி விழா முகூர்த்தக்கால்
மாரியம்மன் கோயிலில் மாசி விழா முகூர்த்தக்கால்
ADDED : பிப் 10, 2024 05:34 AM

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா தொடக்கமாக நந்த முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி அம்மனுக்கு பால், பழம், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்,வெள்ளி கவசம் சாத்த சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.இதை தொடர்ந்து கோயிலை சுற்றி வர சுபமுகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் பூசாரிகள் கணேஷ், சின்ராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள்( பிப்.12) கொடியேற்றம்,பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.27ல் கழுமரம் ஏறுதல், அக்கினி சட்டி,பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ,கோவில் பரம்பரை பூசாரிகள் செய்து வருகின்றனர்.