ADDED : ஜூன் 06, 2025 03:09 AM

நத்தம்: கோட்டையூர் கிராமம் சின்னையம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அம்மன் கோயில் முன்பு ள்ள மந்தை வந்தார்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி,பால்குடம் எடுத்து வந்தனர்.
வர்ண குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.