/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
நாய்கள் தொல்லை
கொடைக்கானல் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர். இதைத்தடுக்க வேண்டும்.
கட்டுப்படுத்தப்படும்
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரோட்டில் கழிவுநீர்
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை கட்டுவதால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
குப்பையால் சீர்கேடு
பழநி அடிவாரம் இட்டேரி ரோடு பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதை அகற்ற வேண்டும்.
அகற்றப்படும்
போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களை வைத்து பணிகள் நடக்கிறது. குப்பை அகற்றப்படும்.
சீர்கேடாகும் குப்பை
சாணார்பட்டி ஊராட்சி பகுதியில் வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
தீர்வு காணப்படும்
சாணார்பட்டி ஊராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பயன்பாடில்லா சுகாதார வளாகம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது வார்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டதிலிருந்து இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
மாற்று யோசனை
சுகாதார வளாகத்தை பயன்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இதனால் இங்கு நுாலகம் அமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
ஆக்கிரமிப்புகளால் அவதி
சின்னாளபட்டி விலக்கு முதல் பூஞ்சோலை வரை ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நடுரோட்டில் மின்கம்பம்
அய்யலுார் வண்டி கருப்பணசுவாமி கோயிலிலிருந்து கஸ்பா அய்யலுார் பகுதி செல்லும் ரோட்டில் நடுவே இருக்கும் மின்கம்பத்தால் விபத்து ஆபத்து உள்ளது.
மாற்றி அமைக்கப்படும்
பேரூராட்சி நிர்வாகம் மாற்றி அமைப்பதற்குரிய கட்டணம் செலுத்தினால் மாற்றி அமைக்கப்படும்.