ADDED : மே 23, 2025 04:13 AM

நத்தம்: குரும்பபட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் முத்தாலம்மன் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக கோயில் மந்தைக்கு சென்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் ,மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.